அண்ணாகண்ணன் கவிதைகள்: ஓவிய மொழி

Tuesday, August 09, 2005

ஓவிய மொழி

ஓவியர் நெடுஞ்செழியன், குதிரையை மையப்படுத்தி, எண்பதிற்கும் மேற்பட்ட நவீன ஓவியங்களை வரைந்து, ஓவிய மொழி என்ற தலைப்பில், நூல் ஒன்றை வெளியிட்டார். இதயம் பேசுகிறது சரவணா ஸ்டோர்ஸ் இதழினர், அந்த நூலிலிருந்து சில ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து, கவிஞர்கள் சிலரிடம் கொடுத்து, கவிதை எழுதச் சொன்னார்கள். அவ்வகையில் கீழ்க்காணும் ஓவியத்தை என்னிடம் கொடுத்து, கவிதை கேட்டார்கள். நானும் எழுதிக் கொடுத்தேன். அது, 17-3-2002 இதழில் வெளியானது. அக்கவிதை இங்கே:

Image hosted by Photobucket.com

வெட்ட வெட்ட
எனக்கும் தலைமுளைக்கும்!

அனுமனால்
பிடிக்க முடியாத
சூரியப் பழத்தைப்
பிய்த்துத் தின்கிறேன் தினமும்!

மாநகரங்களை எரிக்கும்
கொங்கைகள் இருப்பினும்
இன்னும் என் தோளில்
சமாதானப் புறா!

விடியற் சேவலை
ஈன்றெடுக்கக்
காத்திருக்கிறது
என் மரும உறுப்பு!

நான் ஈழத்துக்காரி!

No comments: