அண்ணாகண்ணன் கவிதைகள்: 2019

Tuesday, January 15, 2019

இனிக்கும் பொங்கல் இன்று!

இதங்கள் ஆயிரம், விதங்கள் ஆயிரம், பதங்கள் ஆயிரம் உண்டு!
உதிக்கும் ஞாயிறு, தழைக்கும் தாவரம், செழிக்கும் பூதலம் இன்று!
துதிக்கும் கோகுலம், அனைத்தும் ஓர்குலம், உயிர்க்கும் மானுடம் இன்று!
புதுக்கும் திங்களே, வெளுக்கும் கங்குலே, இனிக்கும் பொங்கலே இன்று!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!