அண்ணாகண்ணன் கவிதைகள்: புள்ளிக் கவிதைகள் - 2

Wednesday, August 10, 2005

புள்ளிக் கவிதைகள் - 2

கண்ணீர் விட்டு வளர்த்ததனால்
மீண்டும் மீண்டும் கேட்கிறது
ருசி கண்ட வேர்.

--------------------------

எங்கே கிளம்பியதோ,
எங்கே திரும்புமோ
இந்தப் பட்டாம்பூச்சி!

--------------------------

சூரனின் தலைபோல்
வெட்ட வெட்ட முளைக்கும்
உண்மையின் வேர்.

--------------------------

நன்கு இழுத்து மூச்சுவிடு
மருத்துவர் சொல்கிறார்
ஆஸ்துமாக்காரனிடம்.

--------------------------

நெடுநேரமாய்க் கேட்கிறாய்
பேசு பேசு என்று
ஊமையிடம்.

--------------------------

கேட்கிறார் தியாகியின் பேச்சை
அடுத்து வருவது
சிம்ரன் பேட்டி.

--------------------------

கூண்டுக்கு வெளியேயும்
சிறைதான்
சிறகறுந்த பறவைக்கு.

--------------------------

மூன்று போதாது மகாத்மா!
நாற்றம் தவிர்ப்பதற்காக வேண்டும்
நான்காவது குரங்கு.

(இலக்கிய நந்தவனம் ஜூன் 2000)

No comments: