அண்ணாகண்ணன் கவிதைகள்: அருமருந்து ஆவாரம்பூ | Aavaarampoo for Diabetes | Senna auriculata |

Wednesday, August 05, 2020

அருமருந்து ஆவாரம்பூ | Aavaarampoo for Diabetes | Senna auriculata |

”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ?” என்பது சித்த மருத்துவப் பழமொழி. ஆவாரம்பூ, சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் அருமருந்தாகும். நீரிழிவு மட்டுமின்றி, மேக நோய்கள், நீர்க்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது.

நீரில் ஆவாரம் பூக்களை இட்டு அல்லது காயவைத்த ஆவாரம்பூப் பொடி சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இதன் மூலம் உடல் சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண், வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

சங்க இலக்கியத்தில் ஆவாரம்பூவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. குறிஞ்சிப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள 99 வகை மலர்களுள் இதுவும் ஒன்று. மேலும் கலித்தொகை, அகநானூறு ஆகியவற்றிலும் இதைப் பாடியுள்ளனர்.

ஆவாரம்பூவை எப்படிப் பயன்படுத்துவது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

No comments: