அண்ணாகண்ணன் கவிதைகள்: புள்ளிக் கவிதைகள் - பகுதி 9

Thursday, January 13, 2011

புள்ளிக் கவிதைகள் - பகுதி 9

 
நானும் ஒரு பறவை.
என் சிறகுகளை
மற்றவர்கள் அசைக்கிறார்கள்.

*****************************************

எந்தச் சொல்லைச் சொல்வது
என்ற மோதலி்ல்
பிறகு அவர்கள்
பேசிக்கொள்ளவே இல்லை. 
 
*****************************************

தானும் பயந்து
என்னையும் பயமுறுத்துகிறது
இந்த நாய்.

*****************************************

எப்போதும்
காரமாகவே இருக்கிறது
கடிகாரம்.

*****************************************

மயிர்க்கால் வெளியே தெரிந்தாலும்
முறைக்கிற மெளடீகக் கணவன் போல்
விரல் நுனி வெளியே தெரிந்தாலும்
விரட்டிக் கடிக்கிறது கொசு.

*****************************************

உன்னைக் கொல்லும்
எண்ணமே எனக்கில்லை.
என்னை ஏன் நி்ர்பந்திக்கிறாய்,
கொசுவே?

****************************************************************************
நன்றி : இருவாட்சி இலக்கியத் துறைமுகம், பொங்கல் சிறப்பு வெளியீடு 2, திசம்பர் 2010 | http://www.vallamai.com/?p=1685
படத்திற்கு நன்றி: விழியன்
****************************************************************************

2 comments:

தமிழ் said...

அருமை
புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துகள்

உனக்காய் said...

Very nice