அண்ணாகண்ணன் கவிதைகள்: புள்ளிக் கவிதைகள் - பகுதி 4

Wednesday, October 08, 2008

புள்ளிக் கவிதைகள் - பகுதி 4



நேற்றிலிருந்து
ஜோசியம் பிடிக்கிறது எனக்கு
உன் கையைப் பிடிக்கும்
வாய்ப்பு கிட்டியதால்.

=======================

உன் விழியில் கருவண்டு.
அது துளைப்பதோ
என் மனத்தை.

=======================

நீ யாரெனக் கேட்டவரிடம்
என் சொந்தம் என்றேன்.
எனக்குச் 'சொந்தம்' ஆவாயா?

=======================

அச்சச்சோ என
நீ உச்சுக் கொட்டுவது
இச்சுக் கொட்டுவது போல
இனிக்கிறது.

=======================

தக்காளி பிடிக்காது
என்றாய் நீ.
அதைக் கேட்டு அழுது அழுது
மேலும் மேலும்
எப்படி சிவந்துவிட்டது பார்!

=======================

படத்திற்கு நன்றி: http://www.palm-reading.co.uk

No comments: