
நெடுநேரமாய்க்
கரைகிறது காகம்.
விருந்தே நீ
என்று வருவாய்?
=======================
என் உயிரை உடலுடன்
தைப்பதால்தானோ
நீ
தையல்?!
=======================
வானில் படபடக்கும்
பட்டம் நான்.
என் நூல்
இதோ உன்னிடம்.
=======================
உன் நினைவலைகளில்
நீந்தும் சிறு மீன் நான்.
கடல் எதற்கு?
உன் தொட்டி(ல்) போதும் எனக்கு.
=======================
என் எழுத்தைப் படித்து,
'கவிதை கவிதை' என்றாய்.
உன் பெயரை ஏன்
இரு முறை சொன்னாய்?
அது இங்கே
இரு நூறு முறை
எதிரொலிக்கிறது.
=======================
படம்: Sunset at the North Pole with the moon at its closest point.
No comments:
Post a Comment