அண்ணாகண்ணன் கவிதைகள்: புள்ளிக் கவிதைகள் - பகுதி 7

Saturday, October 25, 2008

புள்ளிக் கவிதைகள் - பகுதி 7


மண்ணில் விழுந்த மரப்பாச்சி
மழையில் நனைந்து துளிர்விட்டு
கண்முன் எழுந்து நிற்கிறதோ
பெண்ணே உனது உருவத்தில்!

====================

உன் கண்வெட்டு
ஒரு மின்னல்வெட்டு.
நீ காணாவிட்டால்
அதுவே என் மின்வெட்டு.

====================

காற்றில்
உன் கூந்தல் இழைகள்
ஓயாமல் வரைகின்றன
ஓவியங்கள்.

====================

உன் நினைவெனும்
உத்திரத்தில் ஏறிவிட்டு
இறங்கத் தெரியாச்
சிறுவன் நான்.

====================

கெட்டிக்காரி நீ!
சிரித்து மழுப்பிச்
சொல்ல மறுக்கிறாய்
அந்த ஒரு சொல்லை.

====================

ஆயிரம் மரங்கள்
அசைகின்றன
ஒரு காற்றில்.

========================================

படத்திற்கு நன்றி: பிரபாகரன்

========================================

நன்றி: தமிழ் சிஃபி தீபாவளி மலர்

No comments: