அண்ணாகண்ணன் கவிதைகள்: சுடர்

Tuesday, July 20, 2004

சுடர்

வயிற்றிலொரு கடிகாரம் மணியடிக்க
வாய்க்குளத்தில் நீரற்று நாமீன் துள்ள
துயிலுடுக்க விழியிரண்டும் துடிக்க, காரத்
துயருடுத்தி இமையிரண்டும் தடிக்க, கொண்ட
இயல்பனைத்தும் தலைகீழாய் எகிற, மொத்த
இயக்கமொரு சுழலுக்குள் அமிழ, ஆஹா
உயிர்வெளிச்சம் மின்மினிபோல் மின்ன என்முன்
உருப்பெருக்கும் பசிச்சுடர்மம் விண்ணிடிக்கும்.

No comments: