அண்ணாகண்ணன் கவிதைகள்: வீரு – 219

Thursday, December 08, 2011

வீரு – 219



மிரட்டல் அடியிது மின்னல் ஒளியிது
இரட்டைச் சதமிது இறக்கை விரியுது
விரட்டி அடித்தது வீ(ரு)ரம் விளைத்தது
அரியது சேவாக் அகில சாதனை!

நாலா புறத்தையும் நாடிய பந்து
மேலாய், கீழாய் மீட்டிய மட்டை
கோலாகலமாய்க் கொளுத்திய சேவாக்
காலா காலம் உன்பெயர் சொல்லும்!

துணிகர வேட்டை! துடியென வேட்கை!
தணியா வேகம்! தனிப்பெரு மோகம்!
அணியிதன் அணியே! முன்கள மணியே!
பணிவளர் சேவாக், பட்டையைக் கிளப்பு!

No comments: