அண்ணாகண்ணன் கவிதைகள்: வாழ்த்துப் பாடல்

Thursday, January 14, 2010

வாழ்த்துப் பாடல்

வாழ்வு மலரும்; மனம்கனியும்; அன்புமிகும்;
தாழ்விலகும்; வெற்றி தழைக்கும்;சீர் - சூழும்எழில்
வல்லமை கூடும்; வலியினிக்கும்; மண்ணொளிரும்!
எல்லாமே இன்ப மயம்!

தைப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

1 comment:

Kalaimahan said...

மரபுக்கவிதைப்பாலுண்டு வாழஆசை
மாநிலமெங்கனும் உலாச்சென்றேன் பலபோது
நிரைநிரையாய் வாய்த்தது நல்லன
நினது கவிதைகள் தந்தன மெருகு!

எல்லாமே களிபேருவகை தருதென்னில்
என்றும் யாசிப்பேன் நுந்தன் கவிதைக்காய்
சொல்லாலே ஏத்தினேனுமை இன்று
செந்தமி்ழ்க்கு நிகரிலை கண்டேன்யான்!

தருகவுந்தன் மின்னஞ்சல் முகவரிதான்
தவமிருப்பேன் கண்டிடவே யான்!
பேருவகை கொண்டேன் எழுத்தின்பால்
பருகுவே னுந்தன் கவிதைப்பால்தான்!

கலையொடு நாளும் தவழ்ந்திடும்யான்
கலைமகனெனும் நாமத்தான்!
கலைமகனெட் யாகூடொட்கொம்
காத்திருக்குமே கண்டிட வஞ்சல்!!