அண்ணாகண்ணன் கவிதைகள்: உதடு ஒட்டி ஒரு பாடல்

Monday, January 22, 2007

உதடு ஒட்டி ஒரு பாடல்

உதடு ஒட்டாமல் ஒரு பாடல் இயற்றினேன். அதைக் கண்டு தோஹாவிலிருந்து ஜகன், இளம் உள்ளங்கள் உதடு ஒட்டாதிருப்பது குறித்து நயமுடன் வருந்தினார். அவரது வருத்தத்தைப் போக்க, இதோ முழுக்க முழுக்க உதடு ஒட்டியும் குவிந்தும் ஒரு பாடல். சித்திரக் கவியில் ஒட்டியம் என இந்த வகைப் பாடல் அழைக்கப்படுகிறது. இதில் உள்ள ஒவ்வோர் எழுத்தையும் உச்சரிக்கையில் உதடுகள் ஒட்டும் அல்லது குவியும்.

இதே முயற்சியை 10 ஆண்டுகளுக்கு முன்னும் மேற்கொண்டேன். இன்றைய முயற்சியின் பயன் இது:


பம்மிப் போகும் பொம்மி - ஓ
பிம்பம் கும்பம் கும்மி!
பொம்மைப் பாம்பைப் பாரு - வா
சும்மா ஊது ஜோரு!

சூதும் வம்பும் சூழும்
சோம்பும் கூம்பும் வீழும்!
போதும் போதும் கூடு
பாயும் தும்பி பாடு!

வறுமை வெறுமை வெம்மை
கொடுமை கொடுமை கொடுமை!
பொறுமை புதுமை முழுமை
பெருமை பெருமை பெருமை!

1 comment:

வெற்றி said...

கண்ணன்,
நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.