நீ அடிமை
இருவருமே விரல்நீட்டிச் சொல்லிக்கொண்டார்கள்!
நீ முட்டாள்
உதடு துடிக்க ஏசிக்கொண்டார்கள்!
நீ பொய்யன்
கண்சிவக்கக் கடிந்துகொண்டார்கள்!
நீ துரோகி
குரல் அதிரக் கூச்சலிட்டார்கள்!
நீ பைத்தியம்
மேசையை அடித்ததில் பறந்தது தூசி!
அவர்கள்
ஒருவரை ஒருவர் அறிவார்கள்!
அறியாதவர்கள்
பார்வையாளர்களே!
--------------------------
அண்ணாகண்ணன்
05.01.2022
No comments:
Post a Comment