அண்ணாகண்ணன் கவிதைகள்: July 2008

Sunday, July 27, 2008

சிறு சிறகில் ஒரு பறவை



ஓடும் ரெயிலின் ஜன்னலோரம் நான்.

ஒரு குருவியின் சிறு சிறகு
காற்றில் மிதந்து வந்து
என் மடியில் இறங்கியது.

சட்டென
என் முகத்திற்கு நேராக உயர்ந்து
ஓர் அவசர நடனம் ஆடிவிட்டு
என் தோளில் தங்கியது.

அடுத்த விநாடி
பறந்துவிட்டது எங்கோ.

உதிர்ந்த சிறகிலும்
உயிர் வாழ்கிறது பறவை.

=====================================

படத்திற்கு நன்றி: Louise Docker from sydney, Australia