அண்ணாகண்ணன் கவிதைகள்: மாவட்டம்

Wednesday, May 04, 2005

மாவட்டம்

(சிறுவர் பாடல்)

மாவட்டமாம் மாவட்டம்
வளரும் தமிழ் மாவட்டம்

சென்னை மதுரை விழுப்புரம்
தேனி இராம நாதபுரம்
கன்யா குமரி பெரம்பலூர்
காஞ்சி நாகை திருவள்ளூர்
(மாவட்டமாம்
நீல கிரி கிருஷ்ணகிரி
நெல்லை கரூர் தருமபுரி
சேலம் தஞ்சை திண்டுக்கல்
திருவண்ணாமலை நாமக்கல்
(மாவட்டமாம்

திருச்சி கோவை திருவாரூர்
தூத்துக் குடி ஈரோடு
விருது நகர் சிவகங்கை
வேலூர் கடலூர் புதுக்கோட்டை
(மாவட்டமாம்

ஊரும் பேரும் அறிகுவோம்
உலவும் பாதை தெரிகுவோம்
யாரும் போற்றும் தென்னகம்
இனிக்கும் இன்பத் தமிழகம்!
(மாவட்டமாம்
நீரும் நிலமும் மாறலாம்
நிறமும் குணமும் மாறலாம்
பேரு பெற்ற மக்களின்
பெருமை என்றும் பெருமையே!
(மாவட்டமாம்

No comments: