அண்ணாகண்ணன் கவிதைகள்: October 2009

Friday, October 16, 2009

தீபங்கள் தோன்றுக!



தீபங்கள் தோன்றுக! திக்குகள் மின்னுக!
ரூபங்கள் ஆனந்தம் கூட்டுக! - லாபங்கள்
எல்லோர் இடத்தும் எழுக! குதூகலம்
இல்லங்கள் தோறும் இனிப்பு.

உங்கள் இருப்பால் உலகம் தழைக்கிறது
உங்கள் சிரிப்பால் ஒளிர்கிறது - உங்களை
வாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன்; நல்லவை
சூழ்க! சுடர்க! சுபம்!

===========================
படம் எடுத்து, வாழ்த்து அமைத்தவர்: கார்கில் ஜெய்
இடம்: சிகாகோ ஏரி
நாள்: 10.10.2009