அண்ணாகண்ணன் கவிதைகள்: காமராசர்
Showing posts with label காமராசர். Show all posts
Showing posts with label காமராசர். Show all posts

Sunday, July 15, 2007

மகராசர் காமராசர் (சிறுவர் பாடல்)



வாசிக்கக் கல்விச் சாலை
வயிற்றுக்கு நல்ல சோறு!
தேசத்தின் வளத்தைக் கூட்ட
திக்கெட்டும் அணைகள்! ஆலை!
யோசிக்கும் நொடியில் இந்த
யுகம்வெல்லும் மனித நேயர்!
மாசில்லை எனப்பார் போற்றும்
மகராசர் காம ராசர்!

வாய்ச்சொல்லில் வீரர் அல்லர்!
வகுப்புகள் ஆறே கற்றார்!
பாட்டாளி அவரின் பேரில்
பல்கலைக் கழகம் இன்று!
வீழ்ச்சியில் கிடந்த நாட்டை
மீட்பராய் வந்து காத்தார்!
நேயத்தின் எளிய செல்வர்
நிகரில்லாக் காம ராசர்!

---------------------------------
ராணி காமிக்ஸ் இதழில் (2002இல் என்று நினைவு) வெளிவந்தது.