அண்ணாகண்ணன் கவிதைகள்

Sunday, May 08, 2005

உன் சேலையால் எனை மூடு!

Image hosted by Photobucket.com
உன் மடியில் படுத்து
நிலவைப் பார்த்தால்
நிலவின் பேரெழில் தெரிகிறது.

உன் தோளில் சாய்ந்து
இசை கேட்டால்
இசையின் அற்புதம் புரிகிறது

உன் கை கோத்து
நடை பயின்றால்
உலகம் சொர்க்கமாய் விரிகிறது

உனது பூவிதழ்
முத்திரையில்
என் வாழ்க்கை வெற்றி அடைகிறது.

என் ஊற்று நீரில்நீ நீராடு.
உன் வியர்வையில் என்னைக் குளிக்கவிடு.
என் ஒளிச்சுடர் எல்லாம் உனக்குத்தான்
உன் இருட்டை மட்டும் கொடுத்துவிடு.

நானே உனக்கு உடையாவேன்.
உன் மெல்லிய சேலையால் எனை மூடு.
உறக்கம் வராத பித்தன் நான்.
உன் உயிருள் கலந்தால் சித்தன் நான்.